ஜூலையில் வளர்ச்சி கண்டது தொழில் துறை உற்பத்தி ஜூலையில் வளர்ச்சி கண்டது தொழில் துறை உற்பத்தி ...  முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் ...
தங்க இ.டி.எப்., முதலீடு ஆகஸ்டில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2021
19:22

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் முதலீடு அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலையில், இப்பிரிவிலிருந்து அதிகளவில் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஆகஸ்டில் 24 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.உலக சந்தைகளின் சாதகமான நிலை, தங்க முதலீடு குறித்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஆம்பி மேலும் தெரிவித்துள்ளது.கடந்த எட்டு மாதங்களில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் முதலீடு 3,070 கோடி ரூபாயாக உள்ளது. இப்பிரிவில் உள்ள முதலீட்டாளர்களின் கணக்கு எண்ணிக்கை, கடந்த ஜூலையில் 19.13 லட்சமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 21.46 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதை காட்டுவதாக இருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதலாகவே தங்க இ.டி.எப்., முதலீடு நீடித்த வளர்ச்சியை கண்டு வருகிறது.இருப்பினும், கடந்த ஜூலையில் சரிவு கண்ட நிலையில், ஆகஸ்டில் மீண்டும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 23.92 கோடி ரூபாய் என்ற குறைந்த அளவிலான வளர்ச்சியே எட்டப்பட்டு உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இ.டி.எப்., நிதிகள் கருதப்படுகின்றன. இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும். தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்ய இத்திட்டங்கள் உதவுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)