பதிவு செய்த நாள்
11 செப்2021
19:22
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் முதலீடு அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலையில், இப்பிரிவிலிருந்து அதிகளவில் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஆகஸ்டில் 24 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.உலக சந்தைகளின் சாதகமான நிலை, தங்க முதலீடு குறித்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆம்பி மேலும் தெரிவித்துள்ளது.கடந்த எட்டு மாதங்களில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் முதலீடு 3,070 கோடி ரூபாயாக உள்ளது. இப்பிரிவில் உள்ள முதலீட்டாளர்களின் கணக்கு எண்ணிக்கை, கடந்த ஜூலையில் 19.13 லட்சமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 21.46 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதை காட்டுவதாக இருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதலாகவே தங்க இ.டி.எப்., முதலீடு நீடித்த வளர்ச்சியை கண்டு வருகிறது.இருப்பினும், கடந்த ஜூலையில் சரிவு கண்ட நிலையில், ஆகஸ்டில் மீண்டும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 23.92 கோடி ரூபாய் என்ற குறைந்த அளவிலான வளர்ச்சியே எட்டப்பட்டு உள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இ.டி.எப்., நிதிகள் கருதப்படுகின்றன. இவை, தங்கத்தை அடிப்படையாக கொண்ட, பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளாகும். தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்ய இத்திட்டங்கள் உதவுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|