தங்க இ.டி.எப்., முதலீடு ஆகஸ்டில் அதிகரிப்பு தங்க இ.டி.எப்., முதலீடு ஆகஸ்டில் அதிகரிப்பு ...  பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? ...
முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2021
19:25

புதுடில்லி:‘முதலில் உற்பத்தியை துவங்குங்கள்; அதன் பின் வரி சலுகை குறித்து பரிசீலிக்கலாம்’ என, ‘டெஸ்லா’ கார் தயாரிப்பு நிறுவனத்திடம், இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கறாராக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.அதேசமயம், ‘டாடா மோட்டார்ஸ்’ உள்ளிட்ட, உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இத்தகைய சலுகையை வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தான், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், டெஸ்லாவுக்கு இத்தகைய கருத்தை எழுத்து வாயிலாக, கறாராக தெரிவித்துள்ளது.இது குறித்து, அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:அரசு இத்தகைய சலுகையை இதுவரை எந்த வாகன தயாரிப்பு நிறுவனத்துக்கும் வழங்கவில்லை.

டெஸ்லாவுக்கு அத்தகைய சலுகையை வழங்குவது, இந்தியாவில் பல லட்சம் டாலர் முதலீடு செய்து, தொழில் செய்துவரும் மற்ற நிறுவனங்களுக்கு உவப்பானதாக இருக்காது. தற்சமயம் முழுமையாக தயாரித்து இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் டாலருக்கு குறைவான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு, அதன் அளவு, விலை, காப்பீடு, சரக்கு கட்டணம் ஆகியவற்றை பொறுத்து, 60 முதல் 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனம், மின்வாகனங்களுக்கான இறக்குமதி வரியை, அதன் அளவு விலை உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளாமல், சீராக 40 சதவீதமாக வசூலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், அப்படி அனைத்து மின்சார வாகனங்களுக்குமான இறக்குமதி வரியை சீராக 40 சதவீதமாக குறைத்தால், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் விற்பனை, சேவை, மின்னேற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிகளவிலான நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தது.ஆனால், அரசு இதை ஏற்க விரும்பவில்லை.

முதலில் உற்பத்தியை அந்நிறுவனம் துவங்கட்டும். அதன் பின் நிலைமைக்கு ஏற்ப, உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்காத வகையில், தேவையான சலுகைகள் வழங்கலாம் என கருதுகிறது.அரசின் இந்த எண்ணம் தெரிவிக்கப்பட்டு விட்டது. இனி, டெஸ்லா நிறுவனம் தான் முடிவு எடுக்க வேண்டும். மேலும் இதன் வாயிலாக, இறக்குமதி வரி குறித்த அரசின் நிலைப்பாடு என்ன என்பதும் பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரிய வரும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)