பதிவு செய்த நாள்
11 செப்2021
19:36
புதுடில்லி:ஆடைகள் விற்பனையகமான, ‘மான்யவர்’ ஷோரூம்களை நடத்திவரும், ‘வேதாந்த் பேஷன்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கான ஆடைகள் விற்பனையில், நாடு முழுக்க ஈடுபட்டு உள்ளது வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இதன் மான்யவர் பிராண்டுக்கு, நாடு முழுக்க கிட்டத்தட்ட 537 விற்பனையகங்கள் உள்ளன.இவற்றில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் உள்ள 12 பிரத்யேக விற்பனையகங்களும் அடக்கம்.புதிய பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய பங்குகள் எதுவும் விற்பனைக்கு விடப்படாது என தெரிகிறது. கிட்டத்தட்ட 3.64 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, வணிகத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.புதிய புதிய இடங்களில் குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தங்களுடைய விற்பனையகங்களை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
‘ஆக்சிஸ் கேப்பிட்டல், எடைல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|