முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் முதலில் உற்பத்தி; பிறகு சலுகை ‘டெஸ்லா’விடம் அரசு கறார் ...  பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘மான்யவர்’ ஆடைகள் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2021
19:36

புதுடில்லி:ஆடைகள் விற்பனையகமான, ‘மான்யவர்’ ஷோரூம்களை நடத்திவரும், ‘வேதாந்த் பேஷன்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கான ஆடைகள் விற்பனையில், நாடு முழுக்க ஈடுபட்டு உள்ளது வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இதன் மான்யவர் பிராண்டுக்கு, நாடு முழுக்க கிட்டத்தட்ட 537 விற்பனையகங்கள் உள்ளன.இவற்றில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் உள்ள 12 பிரத்யேக விற்பனையகங்களும் அடக்கம்.புதிய பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய பங்குகள் எதுவும் விற்பனைக்கு விடப்படாது என தெரிகிறது. கிட்டத்தட்ட 3.64 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, வணிகத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.புதிய புதிய இடங்களில் குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தங்களுடைய விற்பனையகங்களை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

‘ஆக்சிஸ் கேப்பிட்டல், எடைல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்க உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)