பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன? ...  ‘அடல் பென்ஷன்’ திட்ட விதியில் மாற்றம் ‘அடல் பென்ஷன்’ திட்ட விதியில் மாற்றம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வைப்பு நிதி முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2021
19:19

அனைவராலும் நாடப்படும் முதலீடு வாய்ப்பாக வைப்பு நிதி அமைகிறது. அதிகம் பாதுகாப்பானது மற்றும் அனைத்து விதமான நிதி இலக்குகளுக்கும் ஏற்றது உள்ளிட்ட அம்சங்கள், வைப்பு நிதியின் சிறப்பம்சமாக அமைகின்றன. பங்கு முதலீடு போன்றவற்றுடன் ஒப்பிடும் போது வைப்பு நிதியின் பலன் குறைவாக இருக்கலாம் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட பலன் இதன் முக்கிய அம்சமாக அமைகிறது. வைப்பு நிதியில் முதலீடு செய்யும் போது, பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். இவற்றில் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.


கால அளவு:


வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அதே போல வைப்பு நிதியின் கால அளவும் வட்டி விகிதத்தை தீர்மானிக்கும். ஓராண்டு வைப்பு நிதியை விட, 10 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி அதிகம் இருக்கும். எனவே, நிதி இலக்குகளுக்கு ஏற்ற கால அளவை தேர்வு செய்ய வேண்டும்.


மதிப்பீடு:



நிதி நிறுவனங்கள் வழங்கும் வைப்பு நிதிகளுக்கு,‘கிரிசில்’ மற்றும் ‘கேர்’ உள்ளிட்ட ‘ரேட்டிங்’ நிறுவனங்கள் மதிப்பீடு வழங்குகின்றன. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப்படுகின்றன. அதிக ரேட்டிங் எனும் அந்த அளவு பாதுகாப்பானது என கருதலாம். எனவே, வைப்பு நிதி மதிப்பீட்டை பார்க்க வேண்டும்.


வட்டி விகிதம்:


தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் சராசரியாக 6.70 சதவீதம் எனும் அளவில் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு சற்று கூடுதல் வட்டி கிடைக்கலாம். வட்டியை மாதாந்திரம் அல்லது காலாண்டு அடிப்படையில் பெறலாம்; முதிர்வு காலத்தில் அசலுடன் சேர்ந்து மொத்தமாக வட்டியை பெறலாம்.


கடன் வசதி:


வைப்பு நிதி கணக்கு கடன் வசதியும் கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். அவசர தேவை எனில் வைப்பு நிதி மீது கடன் பெறலாம். பொதுவாக முதலீட்டில் 75 சதவீதம் வரை கடனாக பெறலாம். தவணையாக செலுத்தி கடனை அடைக்கலாம். வைப்பு நிதி காலம் கடனுக்கான காலமாக அமையும்.


நிறுவனம்:


பொதுவாக வங்கி வைப்பு நிதி பாதுகாப்பானது. எனினும் வங்கியின் செயல்பாடுகளையும் மனதில் கொள்ள வேண்டும். நிதி நிறுவனங்கள் எனில் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும். வட்டி விகித பலனை மட்டும் பார்க்கக் கூடாது; நிதி இலக்கையும் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)