பதிவு செய்த நாள்
14 செப்2021
23:11
புதுடில்லி:‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடனில், 50 சதவீதத்தை குறைக்க வழி கிடைத்திருப்பதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இந்நிலையில்,‘ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ்’ மற்றும் ‘ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்களை, ‘ஏத்தம்’ நிறுவனம் கையகப்படுத்துவதன் வாயிலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் குறைந்துவிடும் என, ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள், ரிலையன்ஸ் கேப்பிட்டல் வசம் உள்ளன.
தற்போது மேலே குறிப்பிட்டுள்ள இரு நிறுவனங்களையும் ஏத்தம் கையகப்படுத்துவதால், அவற்றின் கடன் தொகையான 20 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், ‘பேலன்ஸ் ஷீட்’டில் பிரதிபலிக்காது. இதையடுத்து, ரிலையன்ஸ் கேப்பிட்டலின் கடன் அளவு பாதியாக குறைந்துவிடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|