பதிவு செய்த நாள்
15 செப்2021
20:35
புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவதற்கு குறைந்தபட்சம் இரு நிறுவனங்களாவது முன்வரும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது
குறிப்பாக, ‘டாடா’ குழுமமும், ‘ஸ்பைஸ் ஜெட்’ தலைவர் அஜய் சிங்கும் முன்வரக் கூடும் என எதிர்பார்க்கிறது.ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கை, கொரோனா காரணமாக தாமதமாகி உள்ளது. இருப்பினும் எப்படியாவது டிசம்பர் மாதத்துக்குள்ளாக விற்பனையை முடித்து விட வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது.
கடந்த முறை 76 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்கத் தயங்கின.இம்முறை 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளதும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதும், வாங்க இருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|