பதிவு செய்த நாள்
15 செப்2021
20:36
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில் 45.76 சதவீதமாக அதிகரித்து உள்ளது என, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்டில், ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரித்து, 2.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. பொறியியல், பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனம் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக இந்த உயர்வு எட்டப்பட்டு உள்ளது.ஏற்றுமதியை போலவே, இறக்குமதியும் ஆகஸ்டில் அதிகரித்து உள்ளது.
இறக்குமதி 51.72 சதவீதம் உயர்ந்து, 3.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆகஸ்டில் 1.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இதுவே அதிகமானதாகும்.
ஏற்றுமதி அதிகரித்து வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் 29.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|