பதிவு செய்த நாள்
15 செப்2021
20:38
புதுடில்லி:‘கெய்ர்ன் எனர்ஜி, ஏர் இந்தியா’ ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து, நியூயார்க் நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை கோரி உள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், மூலதன வரி செலுத்த தவறியதாக கூறி, அதன் பங்குகள், டிவிடெண்டு உள்ளிட்டவற்றை, வருமான வரித் துறை முடக்கியது.இதை எதிர்த்து, கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றது. அத்துடன், நிலுவைத் தொகைக்காக பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய அரசின் சொத்துக்களை முடக்கவும் வழக்கு தொடர்ந்தது.
அதில் அமெரிக்காவில்,ஏர் இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதும் ஒன்று. இந்நிலையில், கடந்த மாதம் இந்த பிரச்னைக்கு காரணமான முன்தேதியிட்ட வருமான வரி வசூல் சட்டத்தை, மத்திய அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து, வழக்குகளை வாபஸ் வாங்கும் முடிவுக்கு கெய்ர்ன் வந்துள்ளது. முதற் கட்டமாக, நியூயார்க் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா சொத்துக்களை முடக்க தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|