பதிவு செய்த நாள்
15 செப்2021
21:00
புதுடில்லி:இலவச வாடகை டிராக்டர் திட்டத்தின் வாயிலாக, தமிழக விவசாயிகளின் 1 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக, பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான, ‘டாபே’ தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், டாபே நிறுவனத்தின் இலவச வாடகை டிராக்டர் சேவை துவங்கப்பட்டது.இதனால், தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர். 60 நாட்களில் 1.55 லட்சம் மணி நேரத்துக்கும் அதிகமாக இலவச டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் சேவை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டாபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் கூறியதாவது: இத்திட்டத்தின் வாயிலாக, டிராக்டர்களை வாடகைக்கு விடும் விவசாயிகள் மற்றும் இலவசமாக சேவையை பெற்ற விவசாயிகள் என, இரு தரப்பினரும் பயன்பெற்று உள்ளனர்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|