இலவச வாடகை டிராக்டர் தமிழக விவசாயிகள் பயன் இலவச வாடகை டிராக்டர் தமிழக விவசாயிகள் பயன் ...  டி.வி.எஸ்., ஆர்வம் டி.வி.எஸ்., ஆர்வம் ...
சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2021
12:41

மும்பை : மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் மீண்டும் மெல்ல மீண்டு வர தொடங்கி உள்ளன. நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 58,838ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 17,562ஆகவும் ஏற்றம் கண்ட நிலையில் இன்றைக்குள் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நண்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. அதன்பின் சற்று குறைந்து 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமானது. 12.30 மணியளவில் சென்செக்ஸ் 248.27 புள்ளிகள் உயர்ந்து 58,971.47ஆகவும், நிப்டி 58.15 புள்ளிகள் உயர்ந்து 17,577.60ஆகவும் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ, இன்போசிஸ், ஐடிசி, எஸ்பிஐ., கோட்டக் மஹிந்திரா, பொதுத்துறை நிறுவன பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)