பதிவு செய்த நாள்
16 செப்2021
12:41
மும்பை : மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் மீண்டும் மெல்ல மீண்டு வர தொடங்கி உள்ளன. நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 58,838ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 17,562ஆகவும் ஏற்றம் கண்ட நிலையில் இன்றைக்குள் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நண்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. அதன்பின் சற்று குறைந்து 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமானது. 12.30 மணியளவில் சென்செக்ஸ் 248.27 புள்ளிகள் உயர்ந்து 58,971.47ஆகவும், நிப்டி 58.15 புள்ளிகள் உயர்ந்து 17,577.60ஆகவும் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ, இன்போசிஸ், ஐடிசி, எஸ்பிஐ., கோட்டக் மஹிந்திரா, பொதுத்துறை நிறுவன பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|