பதிவு செய்த நாள்
16 செப்2021
19:40
புதுடில்லி:‘பாரஸ் டிபன்ஸ் அண்டு ஸ்பேஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனம் இம்மாதம் 21ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலையை 165 – 175 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 171 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் பொறியியல் தயாரிப்புகளுக்கான வடிவமைப்பு, மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல் ஆகியவற்றை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதன் புதிய பங்கு வெளியீடு 21ம் தேதி துவங்கி, 23ம் தேதியன்று முடிவடைய உள்ளது. பங்கு வெளியீட்டின் போது 140.6 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 17.24 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்கவும், மூலதன செலவுகள், நடைமுறை மூலதன தேவைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|