பதிவு செய்த நாள்
18 செப்2021
19:59
புதுடில்லி:கடந்த வாரத்தில், விமான போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, பயணத்துக்கான சேவைகள் அதிகரித்து வருவதை அடுத்து, விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவன பங்குகள் விலை, உயர்வை கண்டுள்ளது.கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று, ‘இண்டர்குளோப்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல், மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 4.97 சதவீதமும்; ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 3.42 சதவீதமும் உயர்வைக் கண்டன.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 67.01 லட்சம் உள்நாட்டு பயணியர் விமானங்களில் பயணித்துள்ளனர்.
இது கடந்த ஜூலையில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 31.33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜூலையில் 50.07 லட்சம் பயணியர் விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர்.கடந்த மே மாதத்தில் 21.15 லட்சம் பேர்களும்; ஏப்ரலில் 57.25 லட்சம் பேர்களும் உள்நாட்டு விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|