பதிவு செய்த நாள்
21 செப்2021
09:07
புதுடில்லி:இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை குறைக்குமாறு,'டெஸ்லா' நிறுவனம் கோரிக்கை வைத்துவந்த நிலையில், தற்போது, 'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனமும் இதே கோரிக்கையை எழுப்பி உள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதிக வரிவிதிப்பால், இந்திய வாடிக்கையாளர்கள், ஒரு காரை அமெரிக்காவில் வாங்குவதை விட, இருமடங்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலை உருவாகிஉள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்வெங்க் கூறியதாவது:இந்தியாவில் கார்கள் மீதான இறக்குமதி வரி, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிக அதிகமாக இருக்கிறது. கார்கள் விற்பனைக்கு உதவும் வகையில், இந்த வரியை அரசு குறைக்க வேண்டும்.மிக குறைந்த அளவிலான கார்களே விற்பனை ஆவதால், மின்சார கார் உள்ளிட்ட அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் உள்நாட்டில் அமைப்பது என்பது நடைமுறையில் சிரமமானது. மின்சார கார்களுக்கு மட்டுமின்றி; அனைத்து சொகுசு கார்களுக்கும் வரியை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|