பதிவு செய்த நாள்
21 செப்2021
09:08
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த,'பஞ்சாப் நேஷனல் பேங்க்', வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கிட்டத்தட்ட 170 கோடி ரூபாயை, அபராதமாக வசூலித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், இந்த தொகை, சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய 2019 - 20 நிதியாண்டில், இதே அபராத விதிப்பின் வாயிலாக, 286 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை வாயிலாக இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இவ்வங்கி, கடந்த நிதியாண்டில், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக 74.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதும் இதன் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டான 2019 - 20ல், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக வசூலான தொகை 114.08 கோடி ரூபாய் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|