பஞ்சாப் நேஷனல் பேங்க்  அபராதம் வாயிலாக வசூல் பஞ்சாப் நேஷனல் பேங்க் அபராதம் வாயிலாக வசூல் ...  முதலீட்டை அதிகரிக்க வேண்டும் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு முதலீட்டை அதிகரிக்க வேண்டும் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அமெரிக்க கதை தான் சீனாவுக்கும் உறுதியாக சொல்லும் உதய் கோட்டக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
19:30

புதுடில்லி:சீனாவைச் சேர்ந்த, ‘எவர்கிராண்டு’ நிறுவனத்தின் நிலையை, 2008ல், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான, ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் பாதிப்புடன் ஒப்பிட்டுள்ளார், ‘கோட்டக் மகிந்திரா வங்கி’யின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான உதய் கோட்டக்.

சீனாவைச் சேர்ந்த இரண்டாவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எவர்கிராண்டு, மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் தத்தளிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இந்நிறுவனம் 22 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டியை கட்ட, சொத்தை விற்க முயற்சி எடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், இந்நிறுவனம் திவால் ஆகிவிடலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதனால் சீன பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, உலக சந்தைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில், கடந்த 2008ம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட முக்கிய காரணமாக அமைந்த, முதலீட்டு நிறுவனமான, ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் வீழ்ச்சியை, எவர்கிராண்டு நிறுவனத்துடன் ஒப்பிட்டுள்ளார், உதய்கோட்டக்.

‘சிட்டி வங்கி’ உள்ளிட்ட சில நிறுவனங்கள், லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் பாதிப்புடன் இதை ஒப்பிட முடியாது என கூறிஇருப்பினும், உதய் கோட்டக் இவ்வாறு உறுதியாக தெரிவித்துள்ளார்.மேலும், இக்கட்டுமான நிறுவனத்தின் சிக்கலை, இந்தியாவின், ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனம், கடந்த 2018ல் நிதிச் சிக்கலில் மாட்டியது. பின் அரசு தலையிட்டு, புதிய நிர்வாக குழுவை, உதய் கோட்டக் தலைமையில் அமைத்தது. சரியான சமயத்தில் அரசு தலையிட்டதை அடுத்து, இக்குழு, 61 சதவீத மீட்பை எட்டியது. சந்தைகளிலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

கிட்டத்தட்ட, 250 நிறுவனங்களை கொண்ட, ஐ.எல்.எப்.எஸ்., குழுமத்தின் கடன் பாக்கி, 94 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், எவர்கிராண்டு நிறுவனத்தை மீட்கும் முயற்சியில், சீன அரசு இறங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)