பதிவு செய்த நாள்
22 செப்2021
20:10
புதுடில்லி:கொரோனா பாதிப்புக்கு பின், நிலையான வளர்ச்சியை நாடு அடைய, உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி சந்தையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஏ., தேசிய மேலாண்மை மாநாட்டில் பங்கேற்று, அவர் மேலும் கூறியுள்ளதாவது: நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும்; வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்.கொரோனா தொற்று நோய், வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளை மிகவும் பாதித்துள்ளது.
எதிர்காலத்தில் வாழும் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதே, நம் முயற்சியாக இருக்க வேண்டும். தனியார் நுகர்வு மற்றும் தேவைகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|