பதிவு செய்த நாள்
22 செப்2021
20:13
புதுடில்லி:ஒரே நாளில், 575 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ‘கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனம்.ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த, கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், நொய்டாவில் உள்ள அதன் சொகுசு வீடுகள் திட்டத்தில், ஒரே நாளில் 575 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிறுவனம், நொய்டாவில் அதன் ‘கோத்ரெஜ் வுட்ஸ்’ எனும் திட்டத்தின் இரண்டாவது பகுதியில், ஒரே நாளில் 5 லட்சம் சதுர அடிகளுடன் கூடிய, 340 வீடுகளை விற்பனை செய்துள்ளது.இந்த கோத்ரெஜ் வுட்ஸ் திட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில், 1,140 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனை முன்பதிவு நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.கொரோனா பாதிப்புகளை மீறி, ரியல் எஸ்டேட் வணிகம் மீட்சி பெறத் துவங்கி இருப்பதாக, துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|