நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
‘சோனி’ உடன் இணைகிறது ‘ஜீ தொலைக்காட்சி நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
20:18

புதுடில்லி:இந்திய தொலைக்காட்சி வர்த்தக சந்தையில் மிகப் பெரிய நிறுவனமான ‘ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ்’ விரைவில் ‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’ நிறுவனத்துடன் இணைய உள்ளது.

ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தில், அதன் பங்கு தாரர்கள் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகளை நீக்க கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இணைக்கப்பட்ட நிறுவனத்தில், சோனிக்கு 52.93 சதவீத பங்கும்; மீதி 47.07 சதவீத பங்கு ஜீ நிறுவனத்துக்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணைப்புக்கு பிறகான நிறுவனத்தில், சோனி, கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 690 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக் காலமாகவே, ஜீ நிறுவனத்தில் அதன் பங்குதாரர்களில் சிலர், தலைமை நிர்வாகியான புனித் கோயங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

குறிப்பாக, ‘இன்வெஸ்கோ டெவலப்பிங் மார்கெட்ஸ் பண்ட்ஸ்’ மற்றும் ‘ஓ.எப்.ஐ., குளோபல் சீனா பண்டு’ ஆகிய நிறுவனங்களின் தரப்பிலிருந்து இந்த கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டது.இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து, ஜீ நிறுவனத்தில் 17.9 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இந்த நிலையில் தான் இணைப்பு அறிவிப்பு வந்துள்ளது.

இணைப்புக்கு பிறகான நிறுவனத்தின் நிர்வாக குழுவில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் சோனி நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும்; புனித் கோயங்கா, தலைமை பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1992ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா குடும்பத்தினரின் பிடியை விலக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், சோனி மீடியா நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு இந்த இணைப்பு பயன்படும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

விஸ்வரூபம்

‘ஜீ என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும், ‘சோனி இந்தியா’ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, புதிய நிறுவனமாக மாறிய பின், அது 70 தொலைக்காட்சி சேனல்கள் 2 ‘வீடியோ ஸ்ட்ரீமிங்’ சேவைகள், இரண்டு சினிமா ஸ்டூடியோ, ஆகியவற்றைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுக்கும்.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் 30.50 சதவீதம் அதிகரித்து 333 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)