பதிவு செய்த நாள்
22 செப்2021
20:19
புதுடில்லி:சென்னையைச் சேர்ந்த ‘டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கு தேவையான மின்னணு சாதனங்களை வழங்கும் இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 600- – 700 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 60.70 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைக்கும், உற்பத்தி வசதியை மேம்படுத்தவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|