பதிவு செய்த நாள்
23 செப்2021
21:41
மும்பை:பங்குச் சந்தைகளை பொறுத்தவரை, தீபாவளி கொண்டாட்டம் இப்போதே துவங்கி விட்டது எனலாம். மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ கிட்டத்தட்ட 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிவிட்டது.
கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம் என தொடர்ந்து உயர்வை கண்டு வந்தது.அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 59 ஆயிரத்து 957 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ். பின், வர்த்தகத்தின் இறுதியில் 59 ஆயிரத்து, 885 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிலை பெற்றது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’யும், 17 ஆயிரத்து 823 புள்ளிகளில் நிலைபெற்றது. அடுத்து சென்செக்ஸ், 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் முதலீட்டாளர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|