பதிவு செய்த நாள்
24 செப்2021
10:15
இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வீட்டு உள் அலங்காரம் மற்றும் சீரமைப்பு தளமான லிவ்ஸ்பேஸ் நிறுவனம் 80 சந்தைகளில் தனது விரிவாகத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இவற்றுள் இந்தியாவில் உள்ளவை 60 மற்றும் ஆசிய பசிபிக் நகரங்களில் உள்ளவை 20 ஆகும்.
லிவ்ஸ்பேஸ் நிறுவனம் வீட்டு உள் அலங்காரத் துறையில் 65% சந்தைப் பங்கை வைத்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் 150 வடிவமைப்பு எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக வெளிநாடுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்த 50 மில்லியன் அமெரிக்க டார்களை முதலீடு செய்யவும் லிவ்ஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது.
இதுப்பற்றி இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரமாகாந்த் சர்மா கூறுகையில் ‘ அமைப்பு உருவாக்கம், விலை, காலவரிசை, தரம், விற்பனைக்குப் பின் சேவை என மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதே லிவ்ஸ்பேஸ் நோக்கமாகும். தற்போதைய சந்தைகளில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு லிவ்ஸ்பேஸ் உறுதிப்படுத்திய அனுபவத்தை வழங்கியுள்ளது. எங்களது ‘எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள்’ வாடிக்கையாளர் பயணம் முழுமைக்கும் இந்த அனுபவத்தை வழங்குவதில் முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்தியாவில் 60க்கும் மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 20க்கும் அதிகமான நகரங்களில், மேலும் 150 வடிவமைப்பு எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை நிறுவுவதன் மூலம், புதிய சந்தைகளுக்கும் இதே சிறப்பை வழங்க உள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவம், தனிப்பயனாக்கம் மற்றும் கொள்முதல் தீர்வுகளை பன்னாட்டு பிராண்ட்களிலிருந்து பெற உதவுவோம்’ என்றார்.
லிவ்ஸ்பேஸ் நாடு முழுவதுமுள்ள 1000க்கும் அதிகமான புதிய வடிவமைப்பு தொழில்முனைவோர்களை ஒருங்கிணைக்க உள்ளது. வியாபாரத்தை வளர்க்கத் துறையின் சிறந்த தொழில்நுட்ப தளம், டிஜிடல் வழங்கு சங்கிலித் தொடர், நம்பகமான பிராண்ட் ஆகியவற்றின் அணுக்கம் ஆகியவை மூலம் முனைவு வடிவமைப்பு ஸ்டூடியோ உரிமையாளர்கள் சமூகத்தை உருவாக்க உதவும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|