பதிவு செய்த நாள்
26 செப்2021
01:42
சென்னை:தைவான் வெளிவர்த்தக மேம்பாட்டு கழகம், ‘இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் காலணி தயாரிப்பு துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கை நடத்த உள்ளது.
அயல்நாட்டு வர்த்தக பணியகம், தைவான் வெளிவர்த்தக மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இந்த கருத்தரங்கு, அக்டோபர் 5ம் தேதி அன்று தொடங்குகிறது.தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள் இக்கருத்தரங்கின் வாயிலாக, பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் காலணி தயாரிப்பு துறைகளில் உருவாகி உள்ள நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களின் சாதகங்கள் மற்றும் இந்தியாவில் இத்துறைகளில் உள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்துரைப்பார்கள்.
இந்த இணையவழி கருத்தரங்கில் பங்கேற்கவும், மற்றும் கருத்தரங்கம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும் https://event.taiwantradeshows.com.tw/en/events/42/index.html என்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பிளாஸ்டிக், ரப்பர், காலணிகள் ஆகியற்றில் உற்பத்திக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இத்தேவைகளை தைவான் நாட்டின் நவீன இயந்திரங்களின் வாயிலாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை, இக்கருத்தரங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|