தைவான் இயந்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள கருத்தரங்கு தைவான் இயந்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள கருத்தரங்கு ...  அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகளின் திட்டம் அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகளின் திட்டம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:48

இரு மடங்கு

நடப்பாண்டு பண்டிகை காலத்தில், விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது நுகர்பொருட்கள் துறை. உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பால், நடப்பு ஆண்டில் இரு முறை பொருட்களின் விலையை உயர்த்தியது, ‘செமிகண்டக்டர்’ உள்ளிட்ட பாகங்களில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு, மூன்றாவது அலை குறித்த அச்சம் ஆகியவற்றையும் தாண்டி, விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் சாதனங்கள்

உள்நாட்டு மின்சார சாதனங்களின் சந்தை, 12 சதவீத ஆண்டு வளர்ச்சி பெற்று, 2025ம் ஆண்டில் 5.33 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்தியாவில் இந்த சந்தை 3.55 – 3.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக இருக்கிறது. ஏற்றுமதியை பொறுத்தவரை, 96 ஆயிரத்து 200 கோடி ரூபாய் சந்தையாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி

இந்தியா 2050ல் உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக உருவெடுக்கும் என, பிரிட்டன் பன்னாட்டு வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. உலக இறக்குமதியில், 5.9 சதவீத பங்குடன் சீனா, அமெரிக்கா ஆகியவற்றை அடுத்து, மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தியா, 2.8 சதவீத பங்குடன் உலகளவில் எட்டாவது பெரிய இறக்குமதி நாடாக இருக்கிறது.

ஏற்றுமதி

நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 2.1 சதவீதம் அதிகரித்து, 10.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும்; அடுத்து ஐரோப்பாவுக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏற்றுமதி, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘செமிகண்டக்டர்’

உலக அளவிலான, ‘செமிகண்டக்டர்’ சந்தை, நடப்பு ஆண்டில் 17.3 சதவீத வளர்ச்சி பெறும் என, ஆய்வு நிறுவனமான ஐ.டி.சி., தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சந்தை கடந்த ஆண்டில் 10.8 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி, ‘மொபைல் போன்கள், நோட் புக்ஸ், சர்வர்கள், வாகனங்கள், அணி கருவிகள், கேமிங்’ உள்ளிட்டவற்றால் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)