பதிவு செய்த நாள்
26 செப்2021
19:04
இந்த பண்டிகை காலத்தில் நகர்ப்புற இந்தியர்களில், 28 சதவீதத்தினருக்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
கொரோனா பொதுமுடக்க பாதிப்பால், தங்க நகை விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது. இதிலிருந்து மீட்சி உண்டான நிலையில், இரண்டாம் அலை மேலும் பாதிப்பை உண்டாக்கியது.இந்நிலையில், தற்போது இந்தியர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
நகர்ப்புற இந்தியர்களில் 28 சதவீதம் பேருக்கு மேல், அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பதாக ‘யுகவ்’ ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் நகை வடிவில் வாங்க விரும்பும் நிலையில், மற்றவர்கள் முதலீடு நோக்கில் தங்கம் வாங்க உத்தேசித்துள்ளனர்.மேலும், தங்கம் வாங்க தீபாவளி பண்டிகை காலம் மிகவும் ஏற்றது என பெரும்பாலானோர் கருதுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பண்டிகை காலத்தில் நுகர்வோரின் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதையும் இது உணர்த்துகிறது.தென் மாநிலங்களில் உள்ள நுகர்வோர் செய்கூலி உள்ளிட்ட அம்சங்களை முக்கியமாக கருதும் நிலையில், கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் ‘ஹால்மார்க்’ முத்திரையை முக்கியமாக கருதுகின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|