அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகளின் திட்டம் அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகளின் திட்டம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
ஆயிரம் சந்தேகங்கள்: சேமிப்பு கணக்கு வட்டிக்கும் வரியா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
01:20

எனக்குத் தெரிந்த பெண், அலுவலகத்தில் தவறான ஆதார் எண்ணைக் கொடுத்துவிட்டார். தொடர்ந்து பி.எப்., பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது வேலையில் இருந்து விலகும்போது தான், இந்தத் தவறு தெரிய வந்தது. இதை எப்படி சரி செய்வது? பி.எப்., தொகை கிடைக்குமா?

நாகராஜன், மதுரை.

அந்தப் பெண்ணின் பி.எப்., கணக்கு எந்த மண்டல பி.எப்., அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளதோ, அங்கே சென்று, திருத்தம் செய்யக் கோரி, உரிய படிவத்தை வழங்கலாம். அவருடைய யு.ஏ.என்., என்ன என்பதையும் குறிப்பிட்டு, அதில், ஆதார் எண் திருத்தம் செய்யக் கோர வேண்டும்.

மியூச்சுவல் பண்டு முகவராக ஆக ஆசை. அதற்கு என்ன வழிமுறைகள்?

கோ.இராசேந்திரன், கே.கே.நகர்.

‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூட்டீஸ் மார்க்கெட்’டின், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர் சான்றிதழுக்கான தேர்வெழுதி வெற்றி பெறவேண்டும்.பின், ‘ஆம்பி’ எனும், ‘அசோசியேஷன் ஆப் மியூச்சுவல் பண்ட்ஸ் இன் இந்தியா’வில் பதிவு செய்து, ஆம்பி பதிவு எண் பெற வேண்டும்.இவற்றைப் பெற்றால் தான், மியூச்சுவல் பண்டு திட்டங்களைப் பற்றி ஆலோசனை வழங்கவோ, முகவராகச் செயல்படவோ அங்கீகாரம் பெற்றவர் ஆவீர்கள்.

இதுவரை வங்கிகளில், ‘பிக்சட் டெபாசிட்’ தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கு வருமான வரி கட்டச் சொன்னார்கள். இப்போது, சேமிப்பு கணக்குக்கு வழங்கப்படும் வட்டிக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்கின்றனரே? இது சரியா?

என்.கந்தசாமி, மதுரை 17.

இதை தனிமனிதர் என்ற பார்வையில் இருந்து பார்ப்பதைவிட, தேசம் என்ற பார்வையில் இருந்து அணுகுவதே சரியானது. சேமிப்புக் கணக்கில் பெரிய தொகை நீண்ட காலம் இருப்பது என்பது பயனற்றது.அதை முடங்கிப் போக அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் ஒரு தொழிலிலோ, முயற்சியிலோ, அதை ஈடுபடுத்துவதே நாட்டுக்கு நலம். அமெரிக்காவில் வங்கிச் சேமிப்புக் கணக்குக்கு 0.01 சதவீதம் தான் வட்டி.அதாவது, வங்கியில் பணத்தை வைத்திருக்காதே; அதை ஆக்கப்பூர்வமான, வளர்ச்சி சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுத்து என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா. இந்தியாவும் அதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறது.

நான் 2017ம் ஆண்டு முதல், மாதா மாதம் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் பணம் செலுத்தி வருகிறேன். இப்போது நல்ல முறையில் மார்க்கெட் உள்ளதால், இருக்கும் மதிப்பில் முழுதும் அல்லது பகுதி தொகையை எடுக்க விருப்பப்படுகிறேன். இதில் வரி ஏதாவதுபிடிப்பரா? எவ்வளவு பிடிப்பர்?

சசிதரன்.வீ, கொளத்துார்.

நீங்கள் எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளதால், உங்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி உண்டு. அதாவது, 12 மாதங்களுக்கு மேல் உள்ள முதலீடு ஈட்டியிருக்கும் வருவாய், 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்குமானால், எந்த வரியும் செலுத்த வேண்டாம்.அதற்கு மேல் இருந்தால், 10 சதவீத வரியும், தீர்வையும், கூடுதல் கட்டணமும் உண்டு.

பன்னிரண்டு மாதங்களுக்குள் உள்ள முதலீடு ஈட்டியிருக்கும் வருவாய்க்கு, குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, 15 சதவீத வரியும், தீர்வையும், கூடுதல் கட்டணமும் கட்ட வேண்டும்.மேலும் பங்குச் சந்தை சார்ந்த பண்டுகள் மற்றும் ஹைபிரிட் பண்டுகளுக்கு எனில், 0.001 சதவீதம், ‘செக்யூரிட்டீஸ் டிரான்சாக்‌ஷன் வரி’ செலுத்த வேண்டும். கடன் சார்ந்த பண்டுகளுக்கு இந்த எஸ்.டி.டி., இல்லை.

முதலீட்டின் வாயிலாக, உத்தரவாத மான மாதாந்திர அல்லது ஆண்டு வருமானத்தை பெற விரும்புகிறேன். ஆண்டுதோறும், 1 – 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன்.

சங்கர், மின்னஞ்சல்.

மியூச்சுவல் பண்டுகளில், ‘சிஸ்டமேடிக் வித்டிராயல் திட்டம்’ என்று ஒன்று உண்டு. அதே போல், பல்வேறு ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டுத் திட்டங்களில் மாதாந்திர வருவாய் திட்டங்கள் உள்ளன.அஞ்சலகத்தில், மாதாந்திர வருவாய் திட்டமும் உள்ளது. இவை எல்லாம் உத்தரவாதமான வருவாய் தரும் திட்டங்களே.

மூன்று மாதங்களுக்கு முன், கொரோனாவால் என் மனைவி மறைந்துவிட்டார். 2 குழந்தைகள் உள்ளனர். நிவாரண நிதி பெற முடியுமா?

தண்டபாணி, வாட்ஸ் ஆப்.

கொரோனாவால் மறைந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை கொடுப்பதாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது. இது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாகவே இது நடைமுறைப் படுத்தப்படும். விரைவில் இதற்கான நடைமுறை ஆரம்பிக்கும். காத்திருங்கள்.

அஞ்சலக சேமிப்பில் உள்ள பி.பி.எப்., முதலீட்டுக்கு தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது, மொத்த 15 ஆண்டு காலத்துக்கும் 7.1 சதவீதமாகவே இருக்குமா அல்லது ஒவ்வொரு நிதியாண்டும் மாறுபடுமா?

ராதிகா சிவகுமார், வாட்ஸ் ஆப்.
பி.பி.எப்., வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறுபடும். 10 ஆண்டு கால அரசாங்க கடன் பத்திரங்களின் மாறுபடும் வட்டிக்கு ஏற்ப, பி.பி.எப்., வட்டி விகிதங்களும் மாற்றம் அடையும். 1990 – -2000ம் ஆண்டுகளில் பி.பி.எப்., 12 சதவீத வட்டி கூட கொடுத்துள்ளது. எதிர்காலத்திலும் வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்பதே எதிர்பார்ப்பு.

நான், ‘பான்’ எண் கோரி பதிவு செய்தேனா என்பதே ஞாபகமில்லை. வீட்டில் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நான், பான் வைத்திருக்கிறேனா என்பதை எப்படி உறுதி செய்வது?

எல்.நரசிம்மன், ஜீவா நகர்.

கவலை வேண்டாம். புதிய பான் எண் கோரி, https://tin.tin.nsdl.com/pan/index.html என்ற வலைதளத்தில் பதிவு செய்யத் துவங்குங்கள். உங்கள் விபரங்கள் ஏற்கனவே அவர்களுடைய தரவுதளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றால், புதிய பான் எண்ணைப் பெறுவதற்கான நடைமுறை தொடரும்.

ஒருவேளை, நீங்கள் அளிக்கும் விபரங்கள் ஏற்கனவே பதிவாகி இருக்குமானால், ‘ஆட்சேபனை’ செய்தி காட்டப்படுவதோடு, பழைய பான் எண்ணும் காண்பிக்கப்படும். அந்த எண் கொண்ட பான் அட்டைக்கான பிரதியை, மனு தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
வாச­கர்­களே,
நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com:ph 98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)