பதிவு செய்த நாள்
28 செப்2021
20:06
புதுடில்லி:முன்னணி உர நிறுவனமான, ‘பாரதீப் பாஸ்பேட்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி விண்னப்பித்திருந்த நிலையில், தற்போது செபி அனுமதி வழங்கி உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 1,255 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், பங்குதாரர் மற்றும் நிறுவனர்களின் 12 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் தற்போது, ‘ஜூவாரி மரோக் பாஸ்பேட்’ நிறுவனத்தின் வசம் 80.45 சதவீத பங்குகளும்; அரசின் வசம் 19.55 சதவீத பங்குகளும் உள்ளன. அரசு தன்னிடம் உள்ள 11.24 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.இந்நிறுவன தயாரிப்புகள், ‘ஜெய் கிஸான் நவரத்னா’ மற்றும், ‘நவரத்னா’ எனும் பிராண்டு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|