வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ ‘பிரமல்’ வசம் வந்தது ‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ்’ ‘பிரமல்’ வசம் வந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ஆட்டோ டெபிட்’ வசதி நாளை முதல் மாறுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2021
20:00

புதுடில்லி:வங்கி கணக்கு வாயிலாக, மாதாந்திர பில்கள் மற்றும் தவணை தொகைகளை, ‘ஆட்டோ டெபிட்’ முறையில் செலுத்துவதில், நாளை முதல் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரிசர்வ் வங்கியின் உத்தரவினை அடுத்து, இந்த மாறுதல்களை வங்கிகள் மேற்கொள்ள உள்ளன. இது குறித்து பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன.நம்மில் பலர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, செல்போன், ஓ.டி.டி., உள்ளிட்ட பல சேவைகளை பெற, அதற்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தி வருகிறோம்.

சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையை அதுவாகவே எடுத்துக் கொள்ளும்.ஆனால், இனி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், அப்படி பணம் எடுக்க முடியாது.பணம் எடுப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி வழங்கினால்தான் பணத்தை எடுக்க முடியும்.

மேலும், 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில், ‘ஒரு முறை வழங்கப்படும் கடவு எண்’ வாயிலாக ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, எடுக்க முடியும். கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது நாளை முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)