பதிவு செய்த நாள்
02 அக்2021
00:46
புதுடில்லி:‘ஏர் இந்தியா’வை கையகப்படுத்தும் போட்டியில், ‘டாடா சன்ஸ்’ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக, நேற்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழுவால் ஏலம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அனேகமாக இன்னும் சில நாட்களில் அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நேற்று ஊடகங்களில், டாடா குழுமத்தின் ஏல திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இதையடுத்து, மத்திய அரசின், ‘முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாக துறை’ இதற்கு மறுப்பு தெரிவித்து, ‘அரசு இது குறித்து முடிவு எடுத்த பின், அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும்’ என, ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனமும், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனர் அஜய் சிங்கும் பங்கேற்ற நிலையில், அவற்றின் ஏல விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. கடந்த புதன்கிழமை இவை பரீசீலிக்கப்பட்ட நிலையில் தான், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான, டாடா குழுமத்தின் ஏல திட்டம் ஏற்கப்பட்ட தாக நேற்று செய்திகள் வெளியாகின.
ஏலத்தில், டாடா வெற்றிபெற்றால், ஏர் இந்தியா, அதை உருவாக்கிய கைகளுக்கே மீண்டும் சேர்ந்து விடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|