பதிவு செய்த நாள்
02 அக்2021
00:59
புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தேவைகள் அதிகரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பரில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், செப்டம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ள தாவது:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, கடந்த ஆகஸ்டில் 52.3 புள்ளிகளாக இருந்த நிலையில், செப்டம்பரில் 53.7 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். கடந்த மூன்று மாதங்களாக தேவைகள் அதிகரித்து, வணிகங்கள் தொடர்ந்து மீட்சியை கண்டு வருகின்றன.
மேலும், வெளிநாட்டுக்கான விற்பனையும் உயர்ந்து, வணிக நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.வரும் மாதங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் நிலையில், விற்பனையில் கூடுதல் வளர்ச்சியை எதிர்பார்க்க லாம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|