வளர்ச்சி கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி ...  நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரிப்பு நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2021
01:01

துவங்கியது ‘துபாய் எக்ஸ்போ’

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, ‘துபாய் எக்ஸ்போ 2020’ துவங்கியது. எட்டு ஆண்டு திட்டமிடல் மற்றும் கோடிக்கணக்கான டாலர் செலவு ஆகிய வற்றுக்கு பின் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில், ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தகண்காட்சி, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

வாராக் கடன் வங்கி

விரைவில் அமைக்கப்பட இருக்கும், ‘வாராக் கடன் வங்கி’ என அழைக்கப்படும், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ., யூனியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை, தலா 12 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை பெற்றுள்ளன.இதையடுத்து, வாராக் கடன் வங்கியின் 3.88 கோடி பங்குகள், எஸ்.பி.ஐ., மற்றும் யூனியன் பேங்கின்வசமும்; 1.8 கோடி பங்குகள் பஞ்சாப் நேஷனல் பேங்க் வசமும் செல்கிறது.

அபராதம் விதித்த ‘டிராய்’

‘டிராய்’ எனும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், தொலைதொடர்பு துறை, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.வோடபோன் ஐடியாவுக்கு 2,000 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல்லுக்கு 1,050 கோடி ரூபாயும்அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக, ஏர்டெல் தெரிவித்துள்ளது.

சாட்டிலைட் பிராட்பேண்டு

எலான் மஸ்க் தலைமையிலான, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின், சாட்டிலைட் பிராட்பேண்டு பிரிவுநிறுவனமான, ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் பிராட்பேண்டு சேவையை, அடுத்த ஆண்டு டிசம்பரில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில், 2 லட்சம் இணைப்புகளுடன் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 5 ஆயிரம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி., நிர்வாக இயக்குனர்

எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, பி.சி., பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஜூலை 5ம் தேதியன்று, இவர் இந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக அரசு அறிவித்திருந்தது.இதற்கு முன் இவர், இந்நிறுவனத்தின் செகரட்டரி ஜெனரலாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எல்.ஐ.சி., உயர் பொறுப்பில், ஒரு தலைவரும் இவருடன் சேர்ந்து நான்கு நிர்வாக இயக்குனர்களும் உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)