பதிவு செய்த நாள்
02 அக்2021
01:03
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், வாகன விற்பனை பரவலாக சரிவையே சந்தித்திருக்கிறது. இதற்கு, உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
‘மாருதி சுசூகி’யின் விற்பனை 46.16 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில், 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த மாருதி, நடப்பாண்டு செப்டம்பரில் 86 ஆயிரத்து, 380 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதேபோல், ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் விற்பனையும், 23.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது.
‘மகிந்திரா அண்டு மகிந்திரா’வின் விற்பனை செப்டம்பரில் 21.73 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் விற்பனை 16 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவன விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
கார்கள் விற்பனை மட்டுமின்றி; டிராக்டர்கள் விற்பனையும் சரிந்துள்ளது. ‘எஸ்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 25.6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.விற்பனை சரிவுக்கு, எலக்ட்ரானிக் சாதனங்களின் தட்டுப்பாடு முக்கிய காரணம் என, மாருதி சுசூகி, மகிந்திரா நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|