பதிவு செய்த நாள்
02 அக்2021
19:39
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், மாத சம்பள வேலைகளில், வேலைவாய்ப்பு 85 லட்சமாக அதிகரித்துள்ளதாக, சி.எம்.ஐ.இ., எனும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலையின்மை விகிதமும் 6.9 சதவீதமாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 8.3 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் இந்த நிலை, அதற்கு முந்தைய 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வேலை வாய்ப்பும், செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இப்பிரிவிலான வேலைவாய்ப்பு 56 லட்சம் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 12.84 கோடியாக இருந்தது, செப்டம்பர் மாதத்தில் 13.40 கோடியாக உயர்ந்துள்ளது.இது, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுமான துறையில் மீட்சி ஏற்பட்டு வருவதன் காரணமாக, இத்தகைய அன்றாட வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் செப்டம்பரில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பு, 18 லட்சம் எனும் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|