பதிவு செய்த நாள்
02 அக்2021
19:41
புதுடில்லி: ‘வெல்னஸ் பாரெவர் மெடிகேர்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணபித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,500_1,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.பங்கு வெளியீட்டின் போது, 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; அத்துடன், நிறுவனர் மற்றும் பங்குதாரர்களுடைய பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியில், புதிய மருந்தகங்களை துவக்கவும், மூலதன செலவுகளுக்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், ஆம்பிட், டி.ஏ.எம்., கேப்பிட்டல் அட்வைசர்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி., வங்கி’ ஆகியவை நிர்வகித்து வருகின்றன.இந்த நிறுவனத்தில், ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதார் பூனவாலா, கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|