பதிவு செய்த நாள்
02 அக்2021
19:43
புதுடில்லி:மின்னணு சாதனங்கள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அக்டோபர் மாதத்தில் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளில் வாகன தயாரிப்பு பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, ‘மாருதி சுசூகி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில், ‘செமிகண்டக்டர்’ முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், உலகளவில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மின்னணு சாதனங்கள் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களில் கடுமையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின், ஹரியானாவில் உள்ள குருகான் மற்றும் மானேசர் ஆலைகளின் மொத்த உற்பத்தி திறன், ஆண்டு ஒன்றுக்கு 15 லட்சம் வாகனங்கள். இதேபோல், குஜராத்தில் உள்ள ஆலையின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்கள்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக, வழக்கமான உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கே மேற்கொள்ள முடிந்ததாக, மாருதி சுசூகி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்டோபரிலும் பாதிப்பு இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|