செப்டம்பர் மாத ஏற்றுமதி 21.35 சதவீதம் அதிகரிப்பு செப்டம்பர் மாத ஏற்றுமதி 21.35 சதவீதம் அதிகரிப்பு ...  பண்டிகை கால செலவுகளை திட்டமிடுவது எப்படி? பண்டிகை கால செலவுகளை திட்டமிடுவது எப்படி? ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2021
19:49

ரிலையன்ஸ் இன்டர்நேஷனல்

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், அதற்கு முழுமையாக சொந்தமான, ‘ரிலையன்ஸ் இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, ‘அபுதாபி குளோபல் மார்க்கெட்’டில் துவக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த துணை நிறுவனம், கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், விவசாய பொருட்கள் ஆகியவற்றில் வர்த்தகங்களை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வு

செப்டம்பர் மாதத்தில், நாட்டின் மின்சார நுகர்வு 1.83 சதவீதம் உயர்ந்து, 11 ஆயிரத்து 449 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது, 11 ஆயிரத்து 243 கோடி யூனிட்டாக இருந்தது.கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு வருவதால், வரும் மாதங்களில் மின் நுகர்வு மற்றும் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு வெளியீடு

மனித வள வினியோகம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும், ‘பி.வி.ஜி., இந்தியா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 200 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தனியார் முதலீட்டு நிறுவனமான, ‘3 ஐ குழுமம்’ பங்கு வெளியீட்டின்போது தன் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.

வங்கி சேவை வாபஸ்

தொழில்நுட்ப துறை நிறுவனமான, ‘கூகுள்’ அதன் ‘கூகுள் பே’ செயலி வாயிலாக, வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.இந்த வங்கி சேவையை, பிரபல வங்கிகளுடன் இணைந்து பயனர்களுக்கு வழங்க, கூகுள் நிறுவனம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் அதை அறிமுகம் செய்வதில் தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால், திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி பேசக் கூடாது

‘ருச்சி சோயா’ நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், பாபா ராம்தேவ், ‘கோடீஸ்வரராக விரும்புபவர்கள், இந்நிறுவன பங்குகளை வாங்குங்கள்’ என கூறியிருப்பதை, ‘செபி’ கண்டித்து உள்ளது.நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனராக இருக்கும் பாபா ராம்தேவ், இவ்வாறு வாக்குறுதிகள் வழங்கி பேசுவது விதிமுறைகளுக்கு முரணானது என்று செபி எச்சரித்து கடிதம் எழுதி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)