ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தை வாங்க விரும்பும்’ ‘வேதாந்தா’ நிறுவனம் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தை வாங்க விரும்பும்’ ‘வேதாந்தா’ நிறுவனம் ...  எல்.ஐ.சி.,யில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு  :சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டம் எல்.ஐ.சி.,யில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு :சட்டத் திருத்தம் கொண்டு வர ... ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
20:32

சிறப்பு சலுகை

‘ஹோண்டா கார்ஸ்’ நிறுவனம், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அதன் கார்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் 53 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அத்துடன், இம்மாதம் 31ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த சலுகையை, நாடு முழுக்க இருக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தொழில் பூங்காக்கள்

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட, ‘தொழில் துறை பூங்கா மதிப்பீட்டு அறிக்கையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 41 தொழில் பூங்காக்கள், ‘லீடர்’கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் கிட்டத்தட்ட 98 சதவீத பூங்காக்கள் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களை சேர்ந்தவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பென்ஸ் விற்பனை

ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டின் விற்பனை 100 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4,101 கார்கள் விற்பனை ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,058 கார்களே விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் காப்பர்

பொதுத்துறையை சேர்ந்த, ‘ஹிந்துஸ்தான் காப்பர்’ நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை, ‘வேதாந்தா’ நிறுவனம் வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன பங்கு விலை அதிகரித்தது. நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 10 சதவீதம் அளவுக்கு உயர்வை தொட்டது. பின், வர்த்தக இறுதியில் ---4.16 சதவீத உயர்வுடன், 125.05 ரூபாய் என்ற விலையில் நிலைபெற்றது.

வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை சென்னையில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான, ‘பிராப்ஈக்யுட்டி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில், டில்லி மற்றும் கோல்கட்டாவில் மட்டும் விற்பனை சரிவைக் கண்டிருப்பதாகவும், டெல்லியில் அதிகபட்சமாக 22 சதவீத சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)