வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு ...
எல்.ஐ.சி.,யில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு :சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
20:46

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களும் வாங்க வகை செய்யும் விதமாக, சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகள் வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க ஏதுவாக, இந்த சட்டத் திருத்தம் இருக்கக் கூடும்.

இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் அரசின் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட்டிக் ரூட்’ வாயிலாகவே எல்.ஐ.சி., நிறுவன பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும். இது குறித்து, அரசு அதிகாரிகள் கலந்து பேசியுள்ளனர்.அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் 74 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற போதிலும், இந்த விதி எல்.ஐ.சி., நிறுவனத்துக்கு பொருந்தாது.

இதற்கு பார்லி.,யில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதையடுத்தே, அரசு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.எல்.ஐ.சி.,யின் புதிய பங்கு வெளியீட்டை, அடுத்த மார்ச் மாதத்துக்கு உள்ளாக நடத்த வேண்டும் என அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)