பதிவு செய்த நாள்
07 அக்2021
20:53
புதுடில்லி:‘டாடா’ குழுமத்தைச் சேர்ந்த ‘டைட்டன்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.
கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் தேவைகள் மிக வலுவாக அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை நேற்று 11 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்ந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.11 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.
டாடா குழுமத்தை பொறுத்தவரை, ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம் தான் முதன் முதலாக 2 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியது. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 14.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டைட்டன் நிறுவனத்தின் விற்பனை கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், நாட்டில் உள்ள அனைத்து ஸ்டோர்களின் செயல்படும் நாட்கள் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் அதிகமாகி இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மதிப்பீட்டு காலாண்டில், ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்யும் வசதியையும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.அடுத்து, பண்டிகை காலத்தை ஒட்டி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்தில்913 கோடி ரூபாய்
பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ‘டைட்டன்’ கம்பெனி பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, சந்தையில் நேற்று ஒரே மணி நேரத்தில் 913 கோடி ரூபாய் லாபத்தை சந்தித்துள்ளார். டைட்டன் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும், அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவும் இணைந்து 4.26 கோடி பங்குகளை வைத்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|