வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதல் செய்தி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2021
22:17

மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களுக்கு மேற்கொண்டு வட்டிஅதிகரிக்க வாய்ப்பில்லை.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக்கொள்கை குழு கூட்டம், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டிவிகிதம் எந்த மாறுதலும் செய்யப்படாமல், 4 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது.வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் மேற்கொள்ளாதது இது 8வது முறையாகும்.

முக்கிய அம்சங்கள்:

* ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். மேலும் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதமான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதத்திலும் எந்த மாறுதலும் இன்றி, 4.25 சதவீதமாக தொடரும்

* நடப்பு நிதியாண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தி வளர்ச்சி குறித்த கணிப்பிலும் எந்த மாறுதலும் இன்றி, 9.5 சதவீத மாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

* அதேசமயம் சில்லரை விலை பணவீக்க கணிப்பை, முந்தைய நிலையிலிருந்து குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான சில்லரை விலை பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 5.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது

* பணப்பரிவர்த்தனை சேவைகளில் ஐ.எம்பி.எஸ்., முறையில் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என்றிருப்பது, இனி 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்

* வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க வங்கிகளில், ‘ஓம்புட்ஸ்மேன்’ எனும் குறைதீர்ப்பாளர் இருப்பதை போன்று, இனி பெரிய அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனங்களிலும் குறைதீர்ப்பாளர் அமர்த்தப்படுவர்

* கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை பாதுகாக்க, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, 100 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

* பொருளாதார மீட்சியை ஏற்படுத்தும் வகையில், போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவித்து உள்ளது சில்லரை டிஜிட்டல் பேமென்ட் சேவையை, ‘ஆப்லைன்’ முறையிலும் பெறுவதற்கான கட்டமைப்பை, இந்தியா முழுதும் அறிமுகப்படுத்த உள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த பணக்கொள்கை கூட்டம், டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று தடுப்பு, தடுப்பூசி போடுவதில் நல்ல வேகம், எதிர்பார்க்கப்படும் கரீப் பருவ உணவு தானிய உற்பத்தி, அரசாங்கத்தின் மூலதன செலவுகள், நிதி நிலைமைகள், வெளிப்புற தேவை ஆகிய வற்றின் காரணமாக, நாட்டின் பொருளாதார மீட்சி வேகம் பிடித்துள்ளது.

சக்திகாந்த தாஸ்,

கவர்னர், ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)