பதிவு செய்த நாள்
09 அக்2021
19:39
மும்பை:மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., முறையில் செய்யப்படும் முதலீடு, முதன் முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை, செப்டம்பர் மாதத்தில் தாண்டி உள்ளதாக, ‘ஆம்பி’ எனும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 36.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், எஸ்.ஐ.பி., எனும் வாரம் அல்லது மாதம் என குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முதலீடு, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மியூச்சுவல் பண்டு திட்டங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இந்த தரவுகள் காட்டுவதாக உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் வங்கி பிக்சட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி உள்ளனர்.
எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை, ஆகஸ்டில் 4.32 கோடியாக இருந்தது; செப்டம்பரில் 4.49 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|