பதிவு செய்த நாள்
10 அக்2021
18:55
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் 'மியூச்சுவல் பண்ட்' முதலீடு மற்றும் பங்கு முதலீடு ஆகியவை முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.நிதிச் சேவை ஆலோசனை நிறுவனமான 'பின்டாக்' குழுமம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில், 72 சதவீதத்தினர் கொரோனா முதல் அலைக்கு பின், மியூச்சுவல் பண்ட் முதலீட்டை நாடியதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 63 சதவீதத்தினர் தங்கள் முடிவு நல்ல பலனை அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.இதே போல பலரும் பங்கு முதலீட்டை நாடுவதாகவும் தெரிவித்து உள்ளனர். முதலீட்டாளர்களின் முன்னுரிமை தேர்வுகளை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், மியூச்சுவல் பண்ட்கள் இதில் முன்னுரிமை பெறுவதை உணர முடிவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழுமத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த பிரிவில் பலன் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், முதலீட்டாளர்களின் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தினசரி நோக்கில் பங்கு முதலீட்டில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மத்தியில், 'அல்கோரிதம் டிரேடிங்' முறையும் அதிகம் நாடப்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|