பதிவு செய்த நாள்
12 அக்2021
08:21
முதல் தனியார் நிறுவனம்
‘பார்தி’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ஒன்வெப்’ நிறுவனம், ‘இஸ்ரோ’ எனும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக பிரிவான, ‘நியூஸ்பேஸ் இந்தியா’ நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் அதன் செயற்கைக்கோளை அடுத்த ஆண்டில் ஏவ உள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்திய மண்ணிலிருந்து இஸ்ரோவின் வாயிலாக செயற்கைக்கோளை செலுத்தும் முதல் தனியார் நிறுவனமாக ஒன்வெப் இருக்கும் என, குழுமத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
அதிக பங்கு வெளியீடு
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 72 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 9 மாத காலத்தில் இவ்வளவு அதிக தொகை திரட்டப்பட்டிருப்பது இப்போது தான் முதல் தடவையாகும்.அதிக எண்ணிக்கையிலான பங்கு வெளியீடுகளை பொறுத்தவரை, ஜனவரி – செப்டம்பர் காலத்தில், 2018ல், 130 புதிய பங்கு வெளியீடுகள் வந்துள்ளன; நடப்பாண்டில் 72 ஆகும்.
உச்சம் தொட்ட ‘சென்செக்ஸ்’
கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும், மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 5.03 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை சந்தித்து உள்ளனர். இந்த மூன்று நாட்களில் மட்டும், குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ கிட்டத்தட்ட 950 புள்ளிகள் அளவுக்கு உயர்வை கண்டுள்ளது.மேலும், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 267 லட்சம் கோடி ரூபாயாக, புதிய உச்சம் தொட்டுள்ளது.
அன்னிய முதலீடு அதிகரிப்பு
நீண்டகால அடிப்படையில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா இருப்பதை அடுத்து, இந்திய சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இம்மாதத்தில் கடந்த 8ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1,997 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். இதில் பங்குகளில் மட்டும் 1,530 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|