பதிவு செய்த நாள்
12 அக்2021
08:23
புதுடில்லி: ‘ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதனம் மற்றும் முலதன செலவு தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது 60 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
‘ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டிஸ், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், யெஸ் செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.கடந்த இரு வாரங்களில் மட்டும், ‘எஸ்.ஜே.எஸ்., எண்டர்பிரைசஸ், மொபிகுவிக், ஸ்கான்ரே டெக்’ ஆகிய நிறுவனங்களுடன் சேர்த்து, இதுவரை நான்கு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|