பதிவு செய்த நாள்
12 அக்2021
22:22
'யுனிகார்ன்' ஆனது மொபிகுவிக்
நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான 'மொபிகுவிக்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாயை தாண்டியதை அடுத்து, 'யுனிகார்ன்' அந்தஸ்து பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம் 1,900 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியிட்டுக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், இந்த யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது.
விழிபிதுங்கும் 'எவர்கிராண்டு'
நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டு, மூன்றாவது முறையாகவும் பத்திரங்களுக்கான பணத்தை கொடுக்க வில்லை. எவர்கிராண்டு நிறுவனத்தின் கடன், கிட்டத்தட்ட 22.50 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள நிலையில், இந்நிறுவனம் அதன் வட்டி தொகையான 650 கோடி ரூபாயை கூட கட்டமுடியாமல் தவித்து வருகிறது.
சீனாவுக்கு ஆதரவானவர் இல்லை
உலக வங்கியின் 'தொழில் செய்தல் 2021' எனும் பட்டியலில், சீனாவுக்கு ஆதரவாக தரவுகளில் மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில் அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக, பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அதேசமயம், உலக வங்கி ஊழியர்கள் மீதான விசாரணை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., முன்னாள் தலைவர்
'பாரத ஸ்டேட் வங்கி'யின் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமார், நிதிதொழில்நுட்ப நிறுவனமான 'பாரத்பே' நிறுவனத்தின் தலைவராகசேர்ந்துள்ளார்.எஸ்.பி.ஐ., தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்றதை அடுத்து, தற்போது 'எச்.எஸ்.பி.சி., ஆசியா' மற்றும் 'எல் அண்டு டி., இன்போடெக்' ஆகிய நிறுவனங்களில் செயல்சாரா இயக்குனராக இருந்து வருகிறார்.
'மகாரத்னா' விருது
பொதுத்துறையை சேர்ந்த 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்துக்கு, மத்திய அரசு, மதிப்பு மிக்க 'மகாரத்னா' எனும் அந்தஸ்தை வழங்கி உள்ளது.1986ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், மின்சார துறையில் செயல்படும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிதி நிறுவனமாகும். மகாரத்னா விருது, நிதி மற்றும் செயல்பாட்டு திறனை அதிகரிக்கஉதவும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|