பதிவு செய்த நாள்
13 அக்2021
19:58
மும்பை:மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, நேற்றைய நிலவரப்படி, 270.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஒரு புதிய சாதனை உயர்வாகும்.
முதலீடுகள் அதிகரித்து, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்வை கண்டு வருவதை அடுத்து, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக உயர்வை கண்டு வருகின்றன. பி.எஸ்.இ., எனும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ நேற்று 376 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மேலும், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 8.03 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்வை கண்டுள்ளது.பல முக்கியமான பொருளாதார மற்றும் தொழில் துறைகள் குறித்த தரவுகள் சாதகமானதாக இருந்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறித்த முடிவுகள், பல துறைகளின் தொடர் வளர்ச்சிக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. இவை போன்ற காரணங்களால், சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இருப்பினும், இந்த நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என உறுதியாக சொல்ல முடியாது.
ஆனாலும், இப்போதைய இந்த வலுவான வளர்ச்சி, புதிய சாதனை உயரங்களை தொடும் வகையில் உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|