பதிவு செய்த நாள்
13 அக்2021
20:01
புதுடில்லி;‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், அதன் ‘கிரெடிட்’ மற்றும் ‘டெபிட்’ கார்டுகளில் இருக்கும் காந்தப்பட்டை நீக்கப்பட்டு, ‘சிப்’ அடிப்படையிலான கார்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
வரும் 2024ம் ஆண்டு முதல், காந்தப்பட்டை இல்லாத மாஸ்டர்கார்டின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அறிமுகம் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2033ம் ஆண்டுக்குள்ளாக அனைத்து கார்டுகளும் காந்தப்பட்டை இல்லாததாக மாற்றப்பட்டுவிடும் என்றும் அறிவித்துள்ளது.
மாஸ்டர்கார்டு நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த உலகளவிலான பணம் வழங்கல் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும்.கார்டுகளின் பின்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் காந்தப்பட்டையில் தான் வாடிக்கையாளர் குறித்த தரவுகள் அனைத்தும் இருக்கும். அதை ஏ.டி.எம்., மற்றும் பி.ஓ.எஸ்., மிஷின்களில் தேய்ப்பதன் வாயிலாக, தரவுகள் படிக்கப்பட்டு நம் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
பல ஆண்டுகளாக இந்த முறையில் தான் பணம் வழங்குவது நடைபெற்று வந்தாலும், அது அவ்வளவு பாதுகாப்பானதாக இப்போது இல்லை எனக் கருதப்படுகிறது.இதையடுத்து, காந்தப்பட்டைக்கு பதிலாக, சிப் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதனால் கார்டை தேய்க்க வேண்டிய தேவை எழாது. இவை காந்தப்பட்டை கொண்ட கார்டுகளை விட மிகவும் பாதுகாப்பானது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|