‘இந்திய மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது’ ‘இந்திய மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது’ ...  வளர்ச்சியை தடுக்கும்  ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு வளர்ச்சியை தடுக்கும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காந்தப்பட்டைக்கு பதில் ‘சிப்’ ‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2021
20:01

புதுடில்லி;‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், அதன் ‘கிரெடிட்’ மற்றும் ‘டெபிட்’ கார்டுகளில் இருக்கும் காந்தப்பட்டை நீக்கப்பட்டு, ‘சிப்’ அடிப்படையிலான கார்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

வரும் 2024ம் ஆண்டு முதல், காந்தப்பட்டை இல்லாத மாஸ்டர்கார்டின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அறிமுகம் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2033ம் ஆண்டுக்குள்ளாக அனைத்து கார்டுகளும் காந்தப்பட்டை இல்லாததாக மாற்றப்பட்டுவிடும் என்றும் அறிவித்துள்ளது.

மாஸ்டர்கார்டு நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த உலகளவிலான பணம் வழங்கல் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும்.கார்டுகளின் பின்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் காந்தப்பட்டையில் தான் வாடிக்கையாளர் குறித்த தரவுகள் அனைத்தும் இருக்கும். அதை ஏ.டி.எம்., மற்றும் பி.ஓ.எஸ்., மிஷின்களில் தேய்ப்பதன் வாயிலாக, தரவுகள் படிக்கப்பட்டு நம் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

பல ஆண்டுகளாக இந்த முறையில் தான் பணம் வழங்குவது நடைபெற்று வந்தாலும், அது அவ்வளவு பாதுகாப்பானதாக இப்போது இல்லை எனக் கருதப்படுகிறது.இதையடுத்து, காந்தப்பட்டைக்கு பதிலாக, சிப் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதனால் கார்டை தேய்க்க வேண்டிய தேவை எழாது. இவை காந்தப்பட்டை கொண்ட கார்டுகளை விட மிகவும் பாதுகாப்பானது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)