வளர்ச்சியை தடுக்கும்  ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு வளர்ச்சியை தடுக்கும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு ...  ஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு ஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு ...
மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2021
00:34

புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்தில் சற்று குறைந்து, 10.66 சதவீதமாக உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் விலை அதிகரித்திருந்த போதிலும், உணவு பொருட்கள் விலை குறைந்ததால், மொத்தவிலை பணவீக்கம் குறைந்துள்ளது.இது குறித்து, அமைச்சகம் மேலும்தெரிவித்துள்ளதாவது:மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக, இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 11.39 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் சற்று குறைந்து 10.66 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுவே 1.32 சதவீதமாக இருந்தது.நடப்பாண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு, ரசாயன பொருட்கள் ஆகிய வற்றின் விலை உயர்ந்தது காரணமாக அமைந்தது.

அதே சமயம் உணவு பொருட்கள் பணவீக்கம் தொடர்ந்து 5 மாதங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)