பதிவு செய்த நாள்
15 அக்2021
00:48
புதுடில்லி:நாட்டின் பயணியர் வாகன மொத்த விற்பனை, கடந்த செப்டம்பரில் 41சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:‘செமிகண்டக்டர் சிப்’ தட்டு பாட்டால், வாகன தயாரிப்பு நிறுவனங்களால் போதுமான அளவுக்கு வாகனங்களை தயாரிக்க இயலாமல் போனது. இதன் காரணமாக, கடந்த செப்டம்பரில் விற்பனை 41 சதவீதம்சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.72 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 1.60 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.இருசக்கர வாகன விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிள் விற்பனை 22 சதவீதமும்; ஸ்கூட்டர் விற்பனை 7 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் பயணியர் வாகனம், மூன்று சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் ஆகிய மூன்றும் சேர்ந்து 19 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இந்திய மோட்டார் தயாரிப்பு துறை தொடர்ந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.ஒருபக்கம் இப்போது தான் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் அதேசமயம், இன்னொரு பக்கம் சிப் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வும் சவாலாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|