பதிவு செய்த நாள்
15 அக்2021
21:57
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடு 24 சதவீதம் அதிகரித்து 3,500 கோடி ரூபாயாக உள்ளதாக, ‘சாவில்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகரித்திருந்தாலும், இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, 45 சதவீதம் சரிவை கண்டிருப்பதாகவும் இந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில், தனியார் பங்கு முதலீடு 6,750 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்பட்ட தனியார் பங்கு முதலீட்டில், தரவு மையங்கள் பிரிவில் 34 சதவிதம் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.டிஜிட்டல் இணைப்புகள் மற்றும் தரவு பயன்பாடுகள் காரணமாக, இந்தியாவில் தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், முதலீடுகளும் இப்பிரிவில் அதிகரித்து வருகின்றன.
தடுப்பூசிகள் போடுவது விரைவுபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து, வணிக நம்பிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடுகள் அதிகரிக்க துவங்கி இருக்கின்றன. விரைவில் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இத்துறை திரும்பிவிடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|