மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை ...  பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் வங்கிகளுக்கு போட்டியல்ல’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
19:21

புதுடில்லி:வங்கிகளால் வழங்கப்படும் சில்லரை கடன்கள் மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களில் 50 சதவீதம், அடுத்த 2 –3 ஆண்டுகளில் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களுக்கு மாறும் என ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்கிரண் ராய் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:டிஜிட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் வங்கிகளின் கடன் வழங்கும் செயல்பாட்டை பெரிதும் மாற்றி உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், சில்லரை கடன்கள் மற்றும் தொழில்களுக்கு வழங்கும் கடன்களில் 50 சதவீதம், டிஜிட்டல் வாயிலாக கடன் வழங்கும் தளத்துக்கு மாறிவிடும் என எதிர்பார்க்கிறேன்.

தற்போது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களை விரும்புகிறார்கள். எனவே ஆன்லைனில் சேவைகளை வழங்கக்கூடிய தயாரிப்புகளை வங்கிகள் உருவாக்க வேண்டும்.துவக்கத்தில் நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் வங்கிகளுக்கு போட்டியாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவை இப்போது வங்கிகளுக்கு உதவுவதாக இருக்கிறது.


இனி அவர்கள் நமக்கு போட்டியாளர்கள் அல்ல. அவர்களுடன் நாம் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள், நிறைய தயாரிப்புகளை வங்கிகளுடன் சேர்ந்து உருவாக்கி உள்ளன.பொதுத்துறை வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை கொண்டு வரக்கூடிய புதிய திறமைகளை இந்த அமைப்பில் இருந்து பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)